Type Here to Get Search Results !

Featured Post

 சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு | TNRD Recruitment 2020

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு வேலைவாய்ப்பு

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள இந்த அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆகவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயனடையவும். 

திருச்சிராப்பள்ளி மாவட்ட அலுவலக உதவியாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு வேலைவாய்ப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு வேலைவாய்ப்பு

காலியாக உள்ள பதவியின் பெயர் : 

அலுவலக உதவியாளர் - 01 காலிப்பணியிடம்

பணியின் தன்மை : 

அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றும் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல். 

சம்பளம் : ரூ. 15,700 முதல் 50,000/- வரை. 

வயது வரம்பு : 01.07.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.  பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம் தவிர) சார்ந்தவர்கள் 32 வயது வரை விண்னப்பிக்கலாம். 

இட ஒதுக்கீடு விவரம் : 

பிற்படுத்தப்ட்ட வகுப்பு (முஸ்லீம் தவிர) - 01 காலிப்பணியிடம்

கல்வித் தகுதி : 

8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி? 

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கல்வித் தகுதி சான்று நகல், சாதிச்சான்று நகல், முன்னுரிமை சான்று நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். 


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : 

ஆணையர், 

ஊராட்சி ஒன்றியம், 

புள்ளம்பாடி, 

திருச்சிராப்பள்ளி.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.11.2020 பிற்பகல் 5.45 மணி வரை

மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்துகொள்ளவும்.  

Post a Comment

0 Comments