Type Here to Get Search Results !

Featured Post

 சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் கிராம உதவியாளர் வேலை | Dindigul District Nilakkottai Village Assistant Recruitment 2020

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை வட்டத்தில் 8 கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள இந்த 8 கிராம உதவியாளர் பணியிடத்தையும் நிரப்ப தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் வருமாறு:

  • மட்டப்பாறை கிராமம்- பொதுப்பிரிவு பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்கள்
  • சித்தர்கள்நத்தம் கிராமம் – பிசி (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) – பொது – முன்னுரிமையுள்ளவர்கள்
  • குல்லலக்குண்டு கிராமம் – பொது பிரிவு – பொது – முன்னுரிமையுள்ளவர்கள்
  • விருவீடு கிராமம் – எஸ்சி – பொது –முன்னுரிமையற்றவர்
  • மல்லணம்பட்டி கிராமம் – எம்பிசிஃடிஎன்சி – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்கள்
  • மாலையகவுண்டன்பட்டி கிராமம் – பிசி (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) – பொது –முன்னுரிமையற்றவர்
  • குன்னுவாரன்கோட்டை கிராமம் – பொது பிரிவு – பொது –முன்னுரிமையற்றவர்
  • கணவாய்பட்டி கிராமம் – எஸ்.சி., – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்.

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

  • 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • வயது 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும். 
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். 
  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.


காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும்பொழுது, பணியிடம் காலியாக உள்ள கிராமம் அல்லது 2 கிலோ மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவில் தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில், காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 22.10.2020-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்

மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்கவும்

Post a Comment

0 Comments