திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு
 |
Dindigul District Village Assistant Recruitment 2020 |
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் 9 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் வருமாறு:
- கருங்கல் கிராமம்- ஜிடி-பொது பிரிவு – (பொது) முன்னுரிமையுள்ளவர்
- வடுகம்பாடி கிராமம் – எஸ்.சி.(ஏ) – அருந்ததியர் (பெண்கள்)/ அருந்ததியர் (ஆதரவற்ற விதவை)
- திருக்கூர்ணம் கிராமம் – எம்பிசி/டிஎன்சி – முன்னுரிமையுள்ளவர்கள்
- குளத்துப்பட்டி கிராமம் – பிசி – (பிற்பட்ட வகுப்பினர் முஸ்லீம் நீங்கலாக) – (பொது) முன்னுரிமையுள்ளவர்கள்
- கூம்பூர் கிராமம் – ஜிடி – பொதுப்பிரிவு – முன்னுரிமையற்றவர்கள் (பெண்கள்)/(ஆதரவற்ற விதவைகள்)
- சின்னுலுப்பை கிராமம் – எஸ்சி – (பொது) முன்னுரிமையுள்ளவர்கள்
- தோளிப்பட்டி கிராமம் – எம்பிசி/டிஎன்சி – முன்னுரிமையற்றவர்கள் (பெண்கள்) /(ஆதரவற்ற விதவை)
- கரிக்காலி கிராமம் – பிசி-(பிற்பட்ட வகுப்பினர் முஸ்லீம் நீங்கலாக) – முன்னுரிமையற்றவர் (பெண்கள்) / (ஆதரவற்ற விதவை)
- ஆர்.புதுக்கோட்டை கிராமம் – ஜிடி – பொது பிரிவு – முன்னுரிமையற்றவர்.
கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குஜிலியம்பாறை வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
- 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது 01.07.2020 தேதியை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும்.
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் விண்ணப்பங்களை 02.11.2020-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என குஜிலியம்பாறை வட்டாட்சியர் திரு.எல்.சக்திவேலன் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்கவும்.