Type Here to Get Search Results !

Featured Post

 சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு | District Child Protection Office Social Worker, Counsellor

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் (Social Worker) மற்றும் ஆற்றுப்படுத்துநர் (Counsellor) பணியிடங்கள் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பபட இருக்கிறது. இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு எவ்விதத்திலும் அரசு பணி கோர இயலாது. இந்த காலிப்பணியிடங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும். 

காலிப்பணியிட விபரங்கள் : 

  • சமூகப்பணியாளர் (Social Worker)
  • ஆற்றுப்படுத்துநர் (Counsellor)

கல்வித் தகுதி : 

சமூகப்பணியாளர் (Social Worker) - பட்டதாரி / முதுகலை பட்டதாரி (10+2+3 அடிப்படையில்), உளவியல் (Psychology), சமூகவியல் (Socialogy), சமூகப்பணி (MSW) பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 

ஆற்றுப்படுத்துநர் (Counsellor) - பட்டதாரி / முதுகலை பட்டதாரி (10+2+3 அடிப்படையில்), உளவியல் (Psychology), சமூகப்பணி (MSW), சமூகவியல்களில் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் (Socialogy/Guidance and Counselling) பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 

அனுபவம் :

  1. குழந்தைகள் சார்ந்த பணிகளில் குறைந்தது 2 ஆண்டுகள் கட்டாயம் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். 
  2. கணினி இயக்குதல் அனுபவம் அவசியம்.
வயது : 

40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பிப்பது எப்படி? 

விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் 0421 - 2971198-க்கு தொடர்பு கொள்ளவும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப் பூர்வ அறிவிப்பை ஒரு முறை படித்து விட்டு விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

அறை எண் : 633, 6வது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருப்பூர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.10.2020 மாலை 5.45 மணிக்குள்

Post a Comment

0 Comments