Type Here to Get Search Results !

Featured Post

 சென்னை மாநகர சுகாதார மையங்களில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 140 காலியிடங்கள்

விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு | Virudhunagar District Noon Meal Organiser, Cook Recruitment 2020

விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு
விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு


விருதுநகர் மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் / சமையலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலமாக தகுதிவாய்ந்த நபர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளது.  விருதுநகர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் 209 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


விருதுநகர் மாவட்டத்தில் 99 அமைப்பாளர் பணியிடமும், 110 சமையலர் பணியிடங்களும் காலியாக உள்ளது. 


வ.
எண்.
ஊராட்சி ஒன்றியம் /
நகராட்சியின் பெயர்
அமைப்பாளர் சமையலர்
ஊராட்சி ஒன்றியம்
1. இராசபாளையம் 10 24
2. திருவில்லிபுத்தூர் 10 8
3. வத்திராயிருப்பு 8 3
4. சிவகாசி 11 9
5. வெம்பக்கோட்டை 6 18
6. சாத்தூர் 5 1
7. விருதுநகர் 10 11
8. அருப்புக்கோட்டை 10 8
9. காரியாபட்டி 15 13
10. திருச்சுழி 7 9
11. நரிக்குடி 5 6
நகராட்சி
3. சிவகாசி 1 0
4. சாத்தூர் 1 0
மொத்தம் 99 110

ஊதிய விகிதம் : 

  • சத்துணவு அமைப்பாளர் : ரூ. 7,700 முதல் 24,200 வரை
  • சமையலர் : ரூ. 4,100 முதல் 12,500 வரை

அமைப்பாளர் பணிக்கான தகுதிகள் : 

கல்வித்தகுதி :- 
  • பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 
  • பழங்குடியினர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்றிருக்க வேண்டும். 

சமையலர் பணிக்கான தகுதிகள் : 

கல்வித்தகுதி:- 

  • பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவராக இருக்க வேண்டும். 
  • பழங்குடியினர் எதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு (25.09.2020 அன்றைய தேதி படி):-

  • பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். 
  • பழங்குடியினர் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். 
  • விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது நிரப்பியிருக்க வேண்டும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். 
  • மாற்றுத்திறனாளிகள் 21 வயது நிரம்பியவராகவும் 43 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். 

சத்துணவுத் திட்டத்தில் அனைத்து பணியிடங்களுக்கும் பெண்கள் மட்டுமே நியமனம் செய்ய அரசு ஆணையிடப்பட்டுள்ளது.  

நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இருக்க வேண்டும். 

விருதுநகர் மாவட்ட பள்ளி சத்துணவு மைய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2020

மேலும் விருதுநகர் மாவட்ட பள்ளி சத்துணவு மைய வேலைவாய்ப்புக்கான விவரங்களை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். 

Post a Comment

0 Comments